Wednesday 11 April 2007

என் குற்றமா ?

வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி கொண்டிருக்கும் தருனத்தில்,
உதவியென்று வந்தவர்களுக்கு உதவியது என் குற்றமா ?
உதவியவர்களுக்கிடயே சர்ச்சைகள் வந்த போது
அதை தடுக்க நினைத்தது என் குற்றமா ?
இவைகளை புரிந்து கொள்ளாமல் என்னை இழித்து பேசியும்
பாதகம் ஒன்றும் செய்யாமல், விலகி இருந்தது என் குற்றமா ?
இந்த செயலால், ஒதுக்க பட்டவர்களை மேலும் உபசரித்தது என் குற்றமா ?
சுயநலமின்றி பிறர்நலம் கருதி செயல் பட்டது என் குற்றமா ?
இந்த அன்பு பிறரை என் மேல் ஈர்த்தது என் குற்றமா ?
அவரது அன்பு என் மேல் காதலாய் மருவியது என் குற்றமா ?
அவரது காதல் வெரும் மாயை என்று விளக்கியது என் குற்றமா ?
பின்பு அதே காதல் வெரியானது என் குற்றமா ?
அந்த விளைவினால் அவர் எல்லையை மீரியது என் குற்றமா ?
அந்த பிஞ்சு மனதில் அன்பும், காதலும், வெரியும் விஷமித்திருந்த போதிலும்,
சாதரனமாக பழகியது என் குற்றமா ?
தவருகள் செய்வது மனித இயல்பென்று,
திருந்துவதர்க்கு சந்தர்பங்களை அளித்தது என் குற்றமா ?

யாரை பழிப்பது ?

எவரும் கெட்டவரில்லை, நல்லவருமில்லை,
கண்ணோரம் கண்ணீரென்றால் சோகமில்லை ஆனால்
கண்ணீரே கண்களென்றால் என் செய்வது
பாவம் விதி வைத்த தீயில் பொசுங்கிய மனதினாலும்,
விழி இரண்டின் நீரில் மூழ்கிய உயிரினாலும்,
வெரி கொண்ட மனசு, என்னை பழித்து பேசியும்,
பரிதாபம் மட்டுமே என் மனசில் இருப்பது என் குற்றமா ?
பாதகம் செய்யாத மனசு பழிக்கப்பட்டாலும்
வாழ்கையில் உன்மையான பேரானந்தம் அடைவதெப்படி ?
இன்னல்கள் கோடி, அழுது கொண்டிருக்கும் வரை
சந்தோஷங்கள் பல கோடி, சிந்தித்து செயல்படும் வரை !