Sunday 4 March 2007

வாரம் எத்தனை நாட்கள் ?


என்னடா இந்த Blogspot இயக்குனர் பாலாவின் படங்களை போலவே இருக்கிறதே என்று பல பேர் கேட்டிருந்த போதும், அவரை போலவே சொந்த கதைகள் யாருடையதாய் இருந்தாலும் இப்படித்தான் இருக்குமென்று முகத்தில் மட்டும் சிரிப்பைக்கொண்டு, மேற்கொண்ட கேள்விகளை தவிர்த்துவிடுகிறேன்.


கன்னித்தமிழ் கண்டதொரு திருவாசகம் !
கல்லை கனியாக்கும் எந்தன் ஒரு வாசகம் ! !

இப்படி என் வாசகங்களுக்கு மரியாதை செய்தவர் ஓரிரெண்டு பேர்கள் இருந்தாலும், நிகழும் உண்மை என்ன ?

சந்தோஷத்தை பகிர்ந்தால் இரட்டிப்பாவதும் , துக்கத்தை பகிர்ந்தால் பாதியாக குறைவதும் உண்மைதான் என்று என் மனதை சற்று பிழிய ஆரம்பித்துள்ளேன்.

சரி, விஷயத்திற்கு செல்லும் தருனம் ஆயிற்று.

தலைப்பிற்கு ஏற்றார்போல அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கைச்சக்கிரம் வேகமாக மாறி வருகிரது.

ஐந்து நாட்கள் வேலை, இரு நாட்கள் ஆட்டம் பாட்டம் என்று பொழுதை வீணடிக்கும் மனிதர்களின் நடுவே, வாரத்திற்கு ஒரு நாள் கூடுதலாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கத்துடன், ஏழு நாட்களும் அயராது வேலை செய்து பனம் சேர்க்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், வாழ்கையில் எப்படியாவது ஒரு சீரான நிலையை அடைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, தினந்தோறும் உடல்நலனை கெடுத்து சேர்த்த பணத்தின் மதிப்பெண்ணெவோ, மருத்துவச்செலவும் படுத்த படுக்கையும் தான்.

சாமுராய்கள் அழக்கூடாது என்ற வாசகத்தின் பாதிப்பால், நாள் தோரும் இருவது மணி நேரம் உழைத்து, நடப்பவை யாவும் நமது நலனுக்கே என்று மனம் தளராமல் வாழ்ந்து வருகிரேன்.

பனம் மட்டும் வாழ்கையல்ல என்று நானும் புரிந்து கொண்டேன். நிலையான சுகம் காண மனதை மீண்டும் வழிநடத்த ஆரம்பித்துள்ளேன்.

துறவு வாழ்கையில் இருந்த அமைதியான மன நிலை இன்று சராசரி மனிதனின் வாழ்கையில் இருப்பதில்லை.

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் !
ஆடித்தானே சேர்த்து வைத்த பாவம் யாவும் தீரனும் !!
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஒடும் மானிடா !!!
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா !!!!

துயருக்கு பயந்து வெகு தூரம் ஓடினாலும், தீய சக்திகளை எதிர்க்கும் திறண் நம்முள் வளரும் வரை, இவைகள் நம்மை விரட்டி கொண்டு தான் இருக்கும்.

எனவே சிந்திக்கவும் சாதிக்கவும் வாய்ப்பளித்த இந்த பிறப்பிற்காக நன்றி சொல்லி வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் காட்டனும் என்ற மன உறுதியுடன், சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன் ஆம் நான் மனிதன் என்று வாழ்க்கையின் சரித்திரத்தில் இடம் பிடிக்க ஆயுத்தமாகி விட்டேன்.